இரு வேறு உலகங்களில்
வசிப்பவர்கள் தான் நாம்.
எனினும்,
நான் உன்னை பின் தொடர்கிறேன்
எப்போதும்.
உன் வயலினில் இருந்து
வழியும் இசையுடன்
இணைந்திருக்கிறேன்.
உன் பேனாவிலிருந்து
வார்த்தைகளை
என் மீது தான் உதிர்க்கிறாய்
நீ சுயமுடன் இருந்தர்க்காக
புறக்கணிக்கப் பட்டபோது
உன்னுடனான என் இருப்பை நீ அறியவில்லை.....
உன் நண்பனுடனான
உரையாடலில் தனித்து வசிப்பதாய் கூறினாய்
என் இருப்பை அறியாமல்.....
உன் உடலின்
மிக அந்தரங்கமான
மச்சத்தை போன்றது
என் இருப்பு.....
-----------------
--------------------
இந்த குளியல் அறையில்
ஆடைகளற்ற உன் அழகில்
நிலை குத்தி நிற்கின்றன
என் விழிகள்,
திடுக்கிட்டு பார்க்கிறாய்,
யார் என்று கேட்கிறாய்,
ஓசைகளற்ற உலகில் வசிப்பவன்,
எப்படி சொல்வேன்
நான் யார் என்று..........
Thursday, December 30, 2010
மழைத் துளி
எல்லோரும் பேசினார்கள்
மழைக்காலம் பற்றி ,
மழையின் தன்மை பற்றி,
அதன் பயன்பாடு பற்றி,
ஏனோ யாருக்கும் அக்கறை இல்லை
ஒவ்வொரு மழைத் துளியிலும்
சிறிதளவு வானம்
ஒட்டிக் கொண்டிருப்பதைப் பற்றி .....
மழைக்காலம் பற்றி ,
மழையின் தன்மை பற்றி,
அதன் பயன்பாடு பற்றி,
ஏனோ யாருக்கும் அக்கறை இல்லை
ஒவ்வொரு மழைத் துளியிலும்
சிறிதளவு வானம்
ஒட்டிக் கொண்டிருப்பதைப் பற்றி .....
மீதமிருப்பவை
நம்முடைய உறவில்
கடைசியில் மீதமிருப்பவை இவைதான் ;
கருணை முலாம் பூசப்பட்ட
அவமதிப்புகள் ,
காதலின் வேலைப்பாடமைந்த
துரோகங்கள் ,
அன்பின் சாரமழிந்த
வெற்றுச் சொற்கள் ,
நாம் இன்னும் சில காலம்
பழகியிருக்கலாம்
இவற்றையெல்லாம்
அப்புறப் படுத்துவதற்காகவாவது .
கடைசியில் மீதமிருப்பவை இவைதான் ;
கருணை முலாம் பூசப்பட்ட
அவமதிப்புகள் ,
காதலின் வேலைப்பாடமைந்த
துரோகங்கள் ,
அன்பின் சாரமழிந்த
வெற்றுச் சொற்கள் ,
நாம் இன்னும் சில காலம்
பழகியிருக்கலாம்
இவற்றையெல்லாம்
அப்புறப் படுத்துவதற்காகவாவது .
Friday, December 17, 2010
வேட்டை
எந்த கணத்திலும்
நீ
ஒரு கவிதையால்
வேட்டையாடப் படலாம்.
உன்னை வேட்டையாடப் போகும்
ஒரு கவிதையை எழுதுவதற்காக
நீ காத்திருக்கத் தேவையில்லை,
அது யாரோ ஒருவரால்
எழுதப்பட்டிருக்கலாம்
நேற்றோ அல்லது சில நூற்றாண்டுகளுக்கு முன்போ.
காகிதக் குவியல்களுக்கு
இடையில் பதுங்கிக் கிடக்கும்
அதன் இருப்பை
உன்னால் உணரமுடியும்.
ஒரு கவிதையின்
வேட்டை நிலத்திலிருந்து
உன்னால் ஒருபோதும்
தப்பிச்செல்ல முடியாது .
உனக்கிருக்கும்
ஒரே ஒரு சாத்தியமெல்லாம்
ஒரு கவிதையால்
நீ வேட்டையாடப் படுவதை
மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பதுதான்.
நீ
ஒரு கவிதையால்
வேட்டையாடப் படலாம்.
உன்னை வேட்டையாடப் போகும்
ஒரு கவிதையை எழுதுவதற்காக
நீ காத்திருக்கத் தேவையில்லை,
அது யாரோ ஒருவரால்
எழுதப்பட்டிருக்கலாம்
நேற்றோ அல்லது சில நூற்றாண்டுகளுக்கு முன்போ.
காகிதக் குவியல்களுக்கு
இடையில் பதுங்கிக் கிடக்கும்
அதன் இருப்பை
உன்னால் உணரமுடியும்.
ஒரு கவிதையின்
வேட்டை நிலத்திலிருந்து
உன்னால் ஒருபோதும்
தப்பிச்செல்ல முடியாது .
உனக்கிருக்கும்
ஒரே ஒரு சாத்தியமெல்லாம்
ஒரு கவிதையால்
நீ வேட்டையாடப் படுவதை
மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பதுதான்.
காமம் ஒரு சாத்தியக்கூறு.
முழுமையின் பிரவாகத்தில்
ஒரு புள்ளியை
தனக்குள்
புதைத்திருக்கும் ஒரு நொடிக்குள்
துவங்கி முடிந்து விடும்
வாழ்தலுக்கான சாத்தியக்கூறு.
ஒரு புள்ளியை
தனக்குள்
புதைத்திருக்கும் ஒரு நொடிக்குள்
துவங்கி முடிந்து விடும்
வாழ்தலுக்கான சாத்தியக்கூறு.
ஏதுமற்ற வெற்றுக்கணங்கள்.
கணினித் திரையின் ஒளிப்புள்ளிகளில்
கவனம் குவியும்போது,
மாநகரப் பேருந்தின்
நெரிசல் பயணத்தின்போது ,
இப்படி ஏதாவதொரு சந்தர்ப்பத்தில்
நினை விழைகள் அறுந்து
உரு கொள்கின்றன
ஏதுமற்ற வெற்றுக்கணங்கள்
வெறுமை தான் என்றபோதும்
சுமக்க முடியாமல்
திணறுகின்றன மூளை செல்கள்
பேருந்தின் சாளரப் பரப்பில்
நகரும் காட்சிகள்,
அருகாமைப் பெண்ணின்
கூந்தல் வாசம்,
கடந்த காலத்தின் எச்சங்கள் ,
இப்படி எதை இட்டு
நிரப்புவது அதன் வெறுமையை..
பார்வை நிலைகுத்தி நிற்கிறது
சிந்தனை சுழல் ஓய்கிறது
முடிவின்மைக்கும் , எனக்குமான
இடைவெளியை நிரப்புகின்றன
ஏதுமற்ற வெற்றுக்கணங்கள்.
கவனம் குவியும்போது,
மாநகரப் பேருந்தின்
நெரிசல் பயணத்தின்போது ,
இப்படி ஏதாவதொரு சந்தர்ப்பத்தில்
நினை விழைகள் அறுந்து
உரு கொள்கின்றன
ஏதுமற்ற வெற்றுக்கணங்கள்
வெறுமை தான் என்றபோதும்
சுமக்க முடியாமல்
திணறுகின்றன மூளை செல்கள்
பேருந்தின் சாளரப் பரப்பில்
நகரும் காட்சிகள்,
அருகாமைப் பெண்ணின்
கூந்தல் வாசம்,
கடந்த காலத்தின் எச்சங்கள் ,
இப்படி எதை இட்டு
நிரப்புவது அதன் வெறுமையை..
பார்வை நிலைகுத்தி நிற்கிறது
சிந்தனை சுழல் ஓய்கிறது
முடிவின்மைக்கும் , எனக்குமான
இடைவெளியை நிரப்புகின்றன
ஏதுமற்ற வெற்றுக்கணங்கள்.
வாழ்க்கை
நொடியில் தவறிவிடும் பேருந்து
கனவு முடியுமுன்
களைந்து விடும் தூக்கம்,
வேறொருவரின் கையில்
நாம் விரும்பிய பரிசுப்பொருள்,
எடுப்பதற்குள் ஓய்ந்து விடும்
அலைபேசியின் அழைப்பு,
நினைவுக்கு வருமுன்
போக்குவரத்தில் மறைந்து விடும்
எங்கேயோ பார்த்த முகம் ,
கனவு முடியுமுன்
களைந்து விடும் தூக்கம்,
வேறொருவரின் கையில்
நாம் விரும்பிய பரிசுப்பொருள்,
எடுப்பதற்குள் ஓய்ந்து விடும்
அலைபேசியின் அழைப்பு,
நினைவுக்கு வருமுன்
போக்குவரத்தில் மறைந்து விடும்
எங்கேயோ பார்த்த முகம் ,
வாழ்க்கை தான் எவ்வளவு நிச்சயமற்றது !
Tuesday, June 15, 2010
மழையின் வழியே இரவு பெய்து கொண்டிருந்தது
மழையின் வழியே
இரவு பெய்து கொண்டிருந்த
அந்த விசித்திர நாளில்தான்
நம் முதல் சந்திப்பு நிகழ்ந்தது
அந்த இரவின்
சில துளிகளை
என் வீட்டு மீன் தொட்டியில்
சேமித்து வைத்திருக்கிறேன்
நம் அடுத்த சந்திப்பின் போது
உனக்கு பரிசளிப்பதற்காக
அதற்கு முன்
நீ
இரவை பார்த்து
பயப்படுவதை நிறுத்தி விடு
பகலை விடவும்
இரவு கருணை மிக்கது
நமக்கு நாம் சொந்தமாகும் ஓர் இரவில்
உன்னிடம் சொல்வதற்கென்று
என்னிடம் ஒரு ரகசியமுண்டு
முன்பொரு சமயம்
கடவுளின் அதிகாரத்திற்கு
கட்டுப்பட மறுத்த
அந்த தேவதூதன் நான்தான் .
இரவு பெய்து கொண்டிருந்த
அந்த விசித்திர நாளில்தான்
நம் முதல் சந்திப்பு நிகழ்ந்தது
அந்த இரவின்
சில துளிகளை
என் வீட்டு மீன் தொட்டியில்
சேமித்து வைத்திருக்கிறேன்
நம் அடுத்த சந்திப்பின் போது
உனக்கு பரிசளிப்பதற்காக
அதற்கு முன்
நீ
இரவை பார்த்து
பயப்படுவதை நிறுத்தி விடு
பகலை விடவும்
இரவு கருணை மிக்கது
நமக்கு நாம் சொந்தமாகும் ஓர் இரவில்
உன்னிடம் சொல்வதற்கென்று
என்னிடம் ஒரு ரகசியமுண்டு
முன்பொரு சமயம்
கடவுளின் அதிகாரத்திற்கு
கட்டுப்பட மறுத்த
அந்த தேவதூதன் நான்தான் .
Monday, June 14, 2010
இரகசியம்
ஒரு நண்பகலின்
ஆழ்ந்த மௌனத்தில்
உணர்ந்தேன் .
பிரபஞ்ச இரகசியங்களின்
திறவுகோல் ,
காலடியில் மிதிபட்டு
காய்ந்த சருகுகள்
ஏற்படுத்தும் ஓசைக்கும்
நிசப்ததிற்கும்
இடையில்
ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை .
ஆழ்ந்த மௌனத்தில்
உணர்ந்தேன் .
பிரபஞ்ச இரகசியங்களின்
திறவுகோல் ,
காலடியில் மிதிபட்டு
காய்ந்த சருகுகள்
ஏற்படுத்தும் ஓசைக்கும்
நிசப்ததிற்கும்
இடையில்
ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை .
Thursday, June 10, 2010
தேடல் அவசியமானது வாழ்க்கை அவசியமற்றது
இரவின் மடியில்
தவழும் என் தனிமை
உருகும் மெழுகில்
உதிரும் என் கண்ணீர்
ஒரு கணத்தின் முறிவில்
பிறக்கும் கவிதையில்
நிறையும் என் ஆன்மா
கருகும் பூவிதழுக்கும்
கடைசி உயிர்ப்புக்கும்
உள்ள இடைவெளி
என் ஆயுள்
ஆதலால்
என் தேடல் அவசியமானது
இந்த வாழ்க்கை அவசியமற்றது .
Thursday, June 3, 2010
முதல் முத்தம்
ஒற்றை மரத்தின் மறைவில்
உதடுகள் துடிக்க
உடல் நடுங்க
பரிமாறிக் கொள்ளப்பட்ட
முதல் முத்தத்திற்கு
சாட்சியாய்
பெருகி ஓடி
மண்ணில் வீழ்ந்த
வியர்வைத் துளியின்
ஈரம் காயுமுன்
முறிந்து போனது
முதல் காதல்
அவ்விடத்தை கடக்கும் போதெல்லாம்
வீசுகிறது
வியர்வை கலந்த
முத்தத்தின் வாசம்
உதடுகள் துடிக்க
உடல் நடுங்க
பரிமாறிக் கொள்ளப்பட்ட
முதல் முத்தத்திற்கு
சாட்சியாய்
பெருகி ஓடி
மண்ணில் வீழ்ந்த
வியர்வைத் துளியின்
ஈரம் காயுமுன்
முறிந்து போனது
முதல் காதல்
அவ்விடத்தை கடக்கும் போதெல்லாம்
வீசுகிறது
வியர்வை கலந்த
முத்தத்தின் வாசம்
Tuesday, June 1, 2010
அபத்த கவிதை - 3
சாளரத்தின் வழியே
சூரியனின் ஒளிக்கரங்கள்
நீள்கின்றன
கழுவப்படாத தேநீர் கோப்பையை
எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன.
படுக்கை விரிப்பு கலைந்து கிடக்கிறது.
வாசிக்கப் படாத புத்தகங்கள்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன
இவற்றைப் பற்றிய
பிரக்ஞய் இல்லாமல்
மின் விசிறியில் தொங்கிக்கொண்டிருக்கிறது
என் உடல்.
சூரியனின் ஒளிக்கரங்கள்
நீள்கின்றன
கழுவப்படாத தேநீர் கோப்பையை
எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன.
படுக்கை விரிப்பு கலைந்து கிடக்கிறது.
வாசிக்கப் படாத புத்தகங்கள்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன
இவற்றைப் பற்றிய
பிரக்ஞய் இல்லாமல்
மின் விசிறியில் தொங்கிக்கொண்டிருக்கிறது
என் உடல்.
Monday, May 31, 2010
நீலுவுக்காக - 2
உனக்கான
எனது காத்திருப்புகள்
பின்னிரவு விண்மீனின்
இடம்பெயர்வைப் போல்
யாருமறியாதவை.
நீ நடக்கும்
சாலை எங்கும்
மழையாய்,
மரமாய்,
மண் துகளாய்
யாதுமாகி வியாப்பித்திருக்கும்
என் காத்திருப்பின் தீவிரம்.
நீ கடந்து போன பின்னும்
வெயிலாய்,
பனியாய்
படர்ந்திருக்கும்
உன் நினைவுகளின் நீட்சி.
எனது காத்திருப்புகள்
பின்னிரவு விண்மீனின்
இடம்பெயர்வைப் போல்
யாருமறியாதவை.
நீ நடக்கும்
சாலை எங்கும்
மழையாய்,
மரமாய்,
மண் துகளாய்
யாதுமாகி வியாப்பித்திருக்கும்
என் காத்திருப்பின் தீவிரம்.
நீ கடந்து போன பின்னும்
வெயிலாய்,
பனியாய்
படர்ந்திருக்கும்
உன் நினைவுகளின் நீட்சி.
நீலுவுக்காக - 1
காலத்தின் பெரும்பரப்பில்
நிராகரிப்பின் சிலுவையை சுமக்கிறேன்
உன் வார்த்தைகளின் துணையோடு
உன் வார்த்தைகளோ
தீராத சலிப்பின் உச்சம்
மௌனம் பருகி
வார்த்தைகளின் தாகம் தீர்க்கிறேன்.
என் மௌனத்தை நிறைக்கிறது
சிலுவையில் அறையப்படும்
ஆணிகளின் ஓசை.
நிராகரிப்பின் சிலுவையை சுமக்கிறேன்
உன் வார்த்தைகளின் துணையோடு
உன் வார்த்தைகளோ
தீராத சலிப்பின் உச்சம்
மௌனம் பருகி
வார்த்தைகளின் தாகம் தீர்க்கிறேன்.
என் மௌனத்தை நிறைக்கிறது
சிலுவையில் அறையப்படும்
ஆணிகளின் ஓசை.
Tuesday, May 25, 2010
பிசாசுகளுடனான உறவு

கடவுளுடன் சூதாடுவது
பிசாசுகளுடன் சூதாடுவது போல்
சுவாரசியமாக இருப்பதில்லை
கடவுளுடன் சூதாடும் போது
பெறுவதற்கு
சொர்க்கம், நரகம்
சுகவாழ்வு என
ஏதாவது ஒன்று இருப்பதால்
நான் பதட்டமடைகிறேன்
சில நேரங்களில்
பகடையில் விழும் எண்ணிற்கு
மாறாக
காய்களை நகர்த்தி
கடவுளிடம் பிடிபட்டு
குற்றவுணார்விற்கு ஆளாக வேண்டியிருக்கிறது.
ஆனால்
பிசாசுகளுடனான சூதாட்டத்தில்
இழப்பதற்கோ, பெறுவதற்கோ
நிபந்தனைகளோ
எதுவுமில்லை
நீங்கள் ஒரு முழுமையான
சூதாடியாக இருக்க வேண்டும்
என்பதை தவிர.
கடவுளுடனான உறவுகளும்
அசுவாரசியமானாவை தான்
கடவுள் நம்மை விட்டு விலகுவதுமில்லை
நம்மை கைவிடுவதுமில்லை
மேய்ப்பனைத் தொடரும்
ஆடுகள் போல் நாம் இருக்கலாம்
பிசாசுகளோ
துர்நாற்றம் வீசும்,
சாக்கடைகள் சுழிந்தோடும்
ஏதேனும் ஒரு சந்தில்
நம்மை விட்டு மறைந்து விடலாம்
எனவே நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
பிசாசுகளுடனான உறவில்
இத்தனை நன்மைகளும்
சுவாரசியங்களும் இருந்தும்,
அவையெல்லாம்
முடிவற்று , யுகயுகங்களாய்
தொடர்ந்து கொண்டிருப்பதுதான்
என்னை பயமுறுத்துகிறது.
Friday, May 7, 2010
அபத்தக் கவிதை - 1

ஒரு காரணம்
தேவைப்படுகிறது
நான் இறப்பதற்கு.
நீங்கள் என்னை
பைத்தியக்காரன் என்று நினைக்கலாம்.
இந்த காரணம் கூட
எனக்குப் போதுமானது தான்.
ஆனால்
என் இறப்பின்
காரணத்தைப் பற்றி
அக்கறை கொள்பவர்கள்
அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
என் இறப்பு உருவாக்கும்
வெற்றிடத்தை நிரப்ப
என்னளவு
எடையும் ,உயரமும்
கொண்ட ஒரு காரணம்
அவர்களுக்கு தேவைப்படலாம்.
மாலை நேரம்
பூங்காவில் நடப்பதைப் போலவோ
சாளரத்தின் வழியே
மழையை வேடிக்கைப் பார்ப்பது போலவோ
இறப்பை ஏற்றுக்கொள்ள
அவர்கள் மறுப்பது
ஆயாசம் தருவதாக இருக்கிறது.
(காரணங்கள் விற்கும்
கடை ஒன்று இருந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்.)
அவர்கள் ஏற்றுக்கொள்ளும்
தகுந்த கன பரிமாணம் கொண்ட
ஒரு காரணம் கிடைக்கும் வரையாவது
நான் வாழ்ந்தாக வேண்டும்
என்பதுதான்
என் துரதிர்ஷ்டம்.
அபத்தக் கவிதை - 2

என் கவிதைகள்
உங்களுக்கானவை அல்ல.
நீங்கள்
என் கவிதைகளை
உரத்து படிக்கும் போது
நான் மூச்சந்தியில்
நிர்வாணமாய் நிற்பது போல் உணர்கிறேன்.
என் கவிதைகளை
நீங்கள் வாசிக்க விரும்பினால்
உங்கள் மனத்திற்கே தெரியாமல்
மிக அந்தரங்கமாக
மௌனத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள்.
என் கவிதைகள்
மிக பிரத்தியேகமாக,
என் வாழ்வின் சில கணங்களை உடைத்து
எனக்காக சேகரிக்கப்பட்ட ஏதோ ஒன்று.
என் கவிதைகளை
நீங்கள் படிப்பது
என்னுடன் புணர்வது போல தான்.
என் கவிதைகள்
உங்களில்
மனமுவந்த புணர்ச்சியின்
உச்சத்தை உருவாக்கலாம்.
அல்லது
உங்கள் மேல்
எதிர்பாராமல் தெறிக்கும்
ஆண் குறியின் உவர்ந்த கசிவைப் போல்
திடுக்கிடலைஉருவாக்கலாம்.
ஆகவே தான் சொல்கிறேன்
என் கவிதைகள்
உங்களுக்கானவை அல்ல.
Subscribe to:
Posts (Atom)