Friday, December 17, 2010

ஏதுமற்ற வெற்றுக்கணங்கள்.

கணினித் திரையின் ஒளிப்புள்ளிகளில்
கவனம் குவியும்போது,

மாநகரப் பேருந்தின்
நெரிசல் பயணத்தின்போது ,

இப்படி ஏதாவதொரு சந்தர்ப்பத்தில்
நினை விழைகள் அறுந்து
உரு கொள்கின்றன
ஏதுமற்ற வெற்றுக்கணங்கள்

வெறுமை தான் என்றபோதும்
சுமக்க முடியாமல்
திணறுகின்றன மூளை செல்கள்

பேருந்தின் சாளரப் பரப்பில்
நகரும் காட்சிகள்,

அருகாமைப் பெண்ணின்
கூந்தல் வாசம்,

கடந்த காலத்தின் எச்சங்கள் ,

இப்படி எதை இட்டு
நிரப்புவது அதன் வெறுமையை..

பார்வை நிலைகுத்தி நிற்கிறது
சிந்தனை சுழல் ஓய்கிறது

முடிவின்மைக்கும் , எனக்குமான
இடைவெளியை நிரப்புகின்றன
ஏதுமற்ற வெற்றுக்கணங்கள்.

No comments:

Post a Comment