Friday, December 17, 2010

வேட்டை

எந்த கணத்திலும்
நீ
ஒரு கவிதையால்
வேட்டையாடப் படலாம்.

உன்னை வேட்டையாடப் போகும்
ஒரு கவிதையை எழுதுவதற்காக
நீ காத்திருக்கத் தேவையில்லை,
அது யாரோ ஒருவரால்
எழுதப்பட்டிருக்கலாம்
நேற்றோ அல்லது சில நூற்றாண்டுகளுக்கு முன்போ.

காகிதக் குவியல்களுக்கு
இடையில் பதுங்கிக் கிடக்கும்
அதன் இருப்பை
உன்னால் உணரமுடியும்.

ஒரு கவிதையின்
வேட்டை நிலத்திலிருந்து
உன்னால் ஒருபோதும்
தப்பிச்செல்ல முடியாது .

உனக்கிருக்கும்
ஒரே ஒரு சாத்தியமெல்லாம்

ஒரு கவிதையால்
நீ வேட்டையாடப் படுவதை
மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பதுதான்.

No comments:

Post a Comment