Thursday, December 30, 2010

இரு வேறு உலகங்களில்
வசிப்பவர்கள் தான் நாம்.
எனினும்,
நான் உன்னை பின் தொடர்கிறேன்
எப்போதும்.

உன் வயலினில் இருந்து
வழியும் இசையுடன்
இணைந்திருக்கிறேன்.

உன் பேனாவிலிருந்து
வார்த்தைகளை
என் மீது தான் உதிர்க்கிறாய்

நீ சுயமுடன் இருந்தர்க்காக
புறக்கணிக்கப் பட்டபோது
உன்னுடனான என் இருப்பை நீ அறியவில்லை.....

உன் நண்பனுடனான
உரையாடலில் தனித்து வசிப்பதாய் கூறினாய்
என் இருப்பை அறியாமல்.....

உன் உடலின்
மிக அந்தரங்கமான
மச்சத்தை போன்றது
என் இருப்பு.....
-----------------
--------------------
இந்த குளியல் அறையில்
ஆடைகளற்ற உன் அழகில்
நிலை குத்தி நிற்கின்றன

என் விழிகள்,


திடுக்கிட்டு பார்க்கிறாய்,

யார் என்று கேட்கிறாய்,


ஓசைகளற்ற உலகில் வசிப்பவன்,

எப்படி சொல்வேன்

நான் யார் என்று..........

No comments:

Post a Comment