உனக்கான
எனது காத்திருப்புகள்
பின்னிரவு விண்மீனின்
இடம்பெயர்வைப் போல்
யாருமறியாதவை.
நீ நடக்கும்
சாலை எங்கும்
மழையாய்,
மரமாய்,
மண் துகளாய்
யாதுமாகி வியாப்பித்திருக்கும்
என் காத்திருப்பின் தீவிரம்.
நீ கடந்து போன பின்னும்
வெயிலாய்,
பனியாய்
படர்ந்திருக்கும்
உன் நினைவுகளின் நீட்சி.
No comments:
Post a Comment