Monday, May 31, 2010

நீலுவுக்காக - 1

காலத்தின் பெரும்பரப்பில்
நிராகரிப்பின் சிலுவையை சுமக்கிறேன்
உன் வார்த்தைகளின் துணையோடு

உன் வார்த்தைகளோ
தீராத சலிப்பின் உச்சம்

மௌனம் பருகி
வார்த்தைகளின் தாகம் தீர்க்கிறேன்.
என் மௌனத்தை நிறைக்கிறது
சிலுவையில் அறையப்படும்
ஆணிகளின் ஓசை.

No comments:

Post a Comment