
என் கவிதைகள்
உங்களுக்கானவை அல்ல.
நீங்கள்
என் கவிதைகளை
உரத்து படிக்கும் போது
நான் மூச்சந்தியில்
நிர்வாணமாய் நிற்பது போல் உணர்கிறேன்.
என் கவிதைகளை
நீங்கள் வாசிக்க விரும்பினால்
உங்கள் மனத்திற்கே தெரியாமல்
மிக அந்தரங்கமாக
மௌனத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள்.
என் கவிதைகள்
மிக பிரத்தியேகமாக,
என் வாழ்வின் சில கணங்களை உடைத்து
எனக்காக சேகரிக்கப்பட்ட ஏதோ ஒன்று.
என் கவிதைகளை
நீங்கள் படிப்பது
என்னுடன் புணர்வது போல தான்.
என் கவிதைகள்
உங்களில்
மனமுவந்த புணர்ச்சியின்
உச்சத்தை உருவாக்கலாம்.
அல்லது
உங்கள் மேல்
எதிர்பாராமல் தெறிக்கும்
ஆண் குறியின் உவர்ந்த கசிவைப் போல்
திடுக்கிடலைஉருவாக்கலாம்.
ஆகவே தான் சொல்கிறேன்
என் கவிதைகள்
உங்களுக்கானவை அல்ல.
No comments:
Post a Comment